search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நீலகிரி மாவட்டத்தில்  தாட்கோ மூலம் 152 பயனாளிகளுக்கு மானியத்துடன் கடன் உதவி-கலெக்டர் அம்ரித் தகவல்
    X

    நீலகிரி மாவட்டத்தில் தாட்கோ மூலம் 152 பயனாளிகளுக்கு மானியத்துடன் கடன் உதவி-கலெக்டர் அம்ரித் தகவல்

    • தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
    • 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானி–யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு ஆதி திராவி–டர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் வங்கிகடன் மற்றும் மானியத்துடன் கூடிய வாகனங்களை பெற்றுக் கொண்டு பயன்பெற்று வரும் பயனாளிகளை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

    பின்னர் மாவட்ட கலெக்டர் அம்ரித் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் பதவியேற்ற நாள் முதல் மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் தமிழ்நாடு ஆதி–திராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் தொழில் முனைவோர் திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டம் (கிளினிக்),

    மகளிர் சுய உதவிக்கு–ழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்கு ழுக்களுக்கான ொருளாதார கடன் உதவித் திட்டம், நிலம் மேம்படுத்துதல் (இருபா லருக்கும்), துரித மின் இணைப்பு வழங்கும் திட்டம், இந்திய குடிமைப்பணி முதன்மை தேர்வு எழுது வோருக்கு நிதியுதவி, சட்டப்பட்டதாரிகளுக்கு தொழில் துவங்குவதற்கு நிதியுதவி, தமிழ்நாடு தேர்வாணைய தொகுதி 1 முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, பட்டயக்கணக்கர், செலவு கணக்கர், நிறுவுன செயலருக்கு நிதியுதவி என ஆதிதிராவிடர்களுக்காக பல்வேறு செயல் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மேம்பாட்டுக் கழகம் தாட்கோ மூலம் 7. 5.2021 முதல் 31.12.2022 வரை தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் 96 பயனாளிகளுக்கு ரூ.1.18 கோடி மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 47 பயனாளிகளுக்கு ரூ.79.96 லட்சம் மதிப்பிலும், இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் (கிளினிக்) 1 பயனாளிக்கு ரூ.2.25 லட்சம் மதிப்பிலும், மகளிர் உதவிக்குழுக்கான சுழல்நிதி மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவித் திட்டத்தின் கீழ் 8 பய–னாளிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பிலும் என மொத்தம் 152 பயனாளிகளுக்கு ரூ.2.20 கோடி மதிப்பில் மானி–யத்துடன் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேலும், இத்திட்டங்க ளின் மூலம் பயன்பெற விரும்பு–வோர்கள் குடும்ப அட்டை, சாதிசான்று, வருமான சான்று, ஆதார் அட்டை, கல்வி தகுதி சான்றிதழ், கொட்டேஷன் (ஜி.எஸ்.டி.எண்) உடன் திட்ட அறிக்கை ஆகியவற்றி னையும், வாகன கடனுக்காக விண்ணப்பிப்பவர்கள் ஓட்டுநர் உரிமம் மற்றும்

    பேட்ஜ் ஆகிய ஆவணங்களை ஸ்கேன் செய்து http:application.tahdco.com என்றஇணையதள முகவரியில் பதிவேற்றம் செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    இத்திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளி தர்மராஜ் தெரிவித்ததாவது:

    நான் ஊட்டி டேவிஸ்டேல் பகுதியில் வசித்து வருகி–றேன். நான் விவசாயம் தொழில் செய்து வருகி–றேன். நான் தனி நபர் ஒருவரிடம் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் சொந்தமாக ஒரு லோடு வாகனம் வாங்க முடிவு செய்தேன்.

    இது குறித்து என் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்த பொழுது தாட்கேர் மூலம் தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் வாகன கடனுக்காக விண்ணப்பிக்க லாம் என்பது குறித்து தெரிந்து கொண்டு, விண்ணப்பித்து, சொந்த முதலீடாக ரூ.10,248 செலுத்தினேன். இதனுடன் வங்கிகடன் ரூ.6.19 லட்சம், தாட்கோ மானியம் ரூ.2.25 லட்சம் என மொத்தம் ரூ.8.54 லட்சம் மதிப்பில் லோடு வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனத்தை கொண்டு எனது தோட்டத்தில் பயிரிடப்படும் காய்கறிகளை எடுத்து செல்லவும், வெளி வாடகைக்கு செல்வதால் எனது வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்ள மிகவும் பயனுள்ள தாக இருக்கும். இதுபோன்ற திட்டங்களை மிகச்சிறப்பாக செயல்படுத்தி வரும்

    முதல்-அமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சி–யின் போது தாட்கோ மேலாளர் ரவிச்சந்திரன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

    Next Story
    ×