search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    லண்டன் பெண்ணை கரம் பிடித்த கடலூர் என்ஜினீயர்
    X

    லண்டன் பெண்ணை கரம் பிடித்த கடலூர் என்ஜினீயர்

    • ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
    • காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர்.

    கடலூர் :

    கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. ஓய்வுபெற்ற அரசு ஊழியர். இவருடைய மகன் ரஞ்சித். என்ஜினீயரிங் படித்துள்ள இவர் கடந்த சில ஆண்டுகளாக சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் இங்கிலாந்து நாட்டின் தலைநகரான லண்டனை சேர்ந்த அன்னாலுய்சா என்பவரும் பணிபுரிந்து வந்தார்.

    அப்போது ரஞ்சித்துக்கும் அன்னாலுய்சாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் நாளைடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இவர்களது கடல் கடந்த காதல் மலரும் வகையில் இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர்.

    இதையடுத்து காதலர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துக்காக காத்திருந்தனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு இருவரின் பெற்றோரும் திருமணத்துக்கு பச்சைக்கொடி காட்டியதையடுத்து நேற்று கடலூர் அருகே திருவந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் பாரம்பரிய முறைப்படி ரஞ்சித்துக்கும், அன்னாலுய்சாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

    முன்னதாக அன்னாலுய்சா பட்டுச்சேலை அணிந்து மணப்பெண் அலங்காரத்தில் மணமேடையில் வந்து அமர்ந்தார். அதேபோல் பட்டுவேட்டி, சட்டை அணிந்து ரஞ்சித் மணமேடையில் அமர்ந்திருந்தார். பின்னர் புரோகிதர்கள் மந்திரங்கள் கூற, மங்கள வாத்தியம் இசைக்க மணமகன் ரஞ்சித் அன்னாலுய்சாவின் கழுத்தில் தாலி கட்டினார்.

    அப்போது அங்கே நின்ற பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அட்சதையை தூவி மணமக்களை வாழ்த்தினர். பார்க்காமல் காதல், கடிதம் மூலம் காதல், இணைய வழி காதல் என்று இருக்கும் நிலையில் கடலூர் என்ஜினீயர், கடல் கடந்து லண்டன் பெண்ணை காதலித்து இருவீட்டு பெற்றோரின் சம்மதத்துக்காக நீண்ட காலம் காத்திருந்து திருமணம் செய்துகொண்ட சம்பவம் மிகுந்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×