என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
X
கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 9-ம் வகுப்பு மாணவி திடீர் மாயம்
Byமாலை மலர்2 July 2022 8:28 AM GMT
- கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் 9-ம் வகுப்பு மாணவியை திடீரென்று காணவில்லை.
- அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
கடலூர்:
கடலூர் பெண்கள் அரசு மேல்நிலை பள்ளியில் 9-ம் வகுப்பு மாணவி படித்து வருகிறார். இந்த மாணவி கடலூர் அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி வந்தார். கடந்த 2021-ம் ஆண்டு வடலூர் சத்திய ஞான சபை பகுதியில் தனியாக இருந்து வந்ததால் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் மாணவியை மீட்டு வந்து அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைத்து இருந்தனர். மேலும் இங்கிருந்து தினந்தோறும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்த நிலையில் அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்த மாணவி திடீரென்று காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் மாணவியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அரசு குழந்தைகள் காப்பக இடைநிலை ஆசிரியர் ரமா கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து மாணவியை தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X