search icon
என் மலர்tooltip icon

    கடலூர்

    • சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர்.
    • ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை.

    வடலூர்:

    தமிழ்பேரரசு கட்சியின் நிறுவனத்தலைவர் திரைப் பட டைரக்டர் கவுதமன் வடலூரில் சத்தியஞான சபை, சத்திய தருமச்சாலை ஆகிய இடங்களில் வழி பாடு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறிய தாவது:-

    பசியை தீ என்றும், பிணி என்றும் கூறிய மகான் வள்ளலார். சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னரே பசிப்பிணியை போக்க அணையா அடுப்பை ஏற்றி வைத்தவர். அந்த அணையா அடுப்பு இதுநாள் வரையில் 3 வேளையும், வடலூர் வருபவர்களுக்கு பசியாற்றி வருகிறது. வள்ளலாரின் கோட்பாடுகளை உள்வாங்கிய பார்வதிபுரம் கிராம மக்கள் தங்களுக்கு சொந்தமான 106 ஏக்கர் நிலங்களை தானமாக வழங்கினர்கள்.

    அதில் தற்பொழுது 60 ஏக்கர் நிலம் மட்டுமே உள்ளது. இதில்46 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் அரசுக்கு தெரியாதா? இந்த ஆக்கிரமிப்பு இடங்களை பறிமுதல் செய்ய முடியவில்லை. எந்த ஒரு கோவிலாக இருந்தாலும் அக்கோவிலில் இருந்து 100 அடி தூரம் தள்ளிதான் கட்டிடம் கட்ட வேண்டும் என்ற வரையறை உள்ளது. ஆனால் வடலூர் வள்ளலார் தெய்வநிலையத்தில் ஞான சபையின் அருகே 20 அடி அருகில் அரசு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளது. வள்ளலார் தெய்வ நிலையத்தை பார்த்திராத, தமிழக முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் கோட்டையில் இருந்தவாறு அடிக்கல் நாட்டுவது அறமா? நேர்மையா?.

    தமிழக அரசு முதலில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். ஆக்கிரமிப்பு இடம் 46 ஏக்கரை பறிமுதல் செய்து அங்கு சர்வதேச மையம் அமைக்கலாம். வள்ளலார் பெயரில் சர்வதேச மையம் வருவது பிரச்சனை இல்லை. "இதனால் மகிழ்ச்சி அடைகிறோம்.

    ஆனால் வள்ளலார் பெருவெளியில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். இதையே பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வருகிறார்.

    இவ்வாறு டைரக்டர் கவுதமன் கூறினார்.

    • மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
    • கடலூர் பீச்ரோடு, புதுப்பாளையம் மெயின்ரோடு போன்ற இடங்களில் காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    கடலூர்:

    மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வந்தனர்.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடலூர் பாடலீஸ்வரர், வரக்கால்பட்டு செல்வமுத்து மாரியம்மன், கோண்டூர் பெரிய மாரியம்மன், மாளிகம்பட்டு முத்து மாரியம்மன், வானமா தேவி முத்துமாரியம்மன், வெள்ளப்பாக்கம் துர்க்கை அம்மன், பெரிய கங்கணாங்குப்பம் ஏழு கரக மாரியம்மன், குச்சி பாளையம் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி சாமி கும்பிட்டு சென்றனர்.

    மாசி மகத்தையொட்டி கடலூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு மோட்டார் சைக்கிள், கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் பொதுமக்கள் திரண்டு வந்ததால், கடலூர் பீச்ரோடு, புதுப்பாளையம் மெயின்ரோடு போன்ற இடங்களில் காலை முதல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    மேலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் தலைமையில், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடலில் பொதுமக்கள் புனித நீராடும்போது, ஆழமான பகுதிக்கு செல்வதை தடுக்க, கடற்கரையோரம் குறிப்பிட்ட தூரத்துக்கு ஒரு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் நன்கு நீச்சல் தெரிந்த வீரர்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகிய வாகனங்களும் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    • இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடினர்.

    மாசி மாதத்தில் மகம் நட்சத்திரமும், பவுர்ணமியும் இணைந்து வரும் தினமே மாசி மகம் என்று அழைக்கப்படுகிறது. மகத்துவம் நிறைந்த மாசி மாதத்தில் தான் அனைத்து கோவில்களில் உள்ள தெய்வங்களும் நீர்நிலைகளில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

    இந்த ஆண்டுக்கான மாசிமக தீர்த்தவாரி இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி அதிகாலையில் இருந்தே கடலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களும், கோவில்களில் இருந்தும் உற்சவ மூர்த்திகளை மாலைகளால் அலங்கரித்து டிராக்டர், மினி லாரி போன்ற வாகனங்களில் வந்தனர்.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரைக்கு வந்து சேர்ந்தது. பின்னர் கடலூர் பாடலீஸ்வரர், வரக்கால்பட்டு செல்வமுத்து மாரியம்மன், கோண்டூர் பெரிய மாரியம்மன், மாளிகம்பட்டு முத்து மாரியம்மன், வானமா தேவி முத்துமாரியம்மன், வெள்ளப்பாக்கம் துர்க்கை அம்மன், பெரிய கங்கணாங்குப்பம் ஏழு கரக மாரியம்மன், குச்சி பாளையம் முத்து மாரியம்மன் உள்ளிட்ட சாமிகளுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் கடற்கரையில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடி சாமி கும்பிட்டு சென்றனர்.

    • விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா.
    • பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோயிலில் மாசி மகம் பெருவிழா கடந்த 15-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சாமிக்கு தினமும் சிறப்பு அபிஷேக, ஆராதனை, பஞ்சமூா்த்திகள் வீதி உலா நடைபெற்றன.

    இதனையடுத்து 6-ம் நாள் விழாவாக கடந்த 20-ந்தேதி விபசித்து முனிவருக்கு விருத்தகிரீஸ்வரா் காட்சி தரும் ஐதீக திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருவிழா நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகள் தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

    முன்னதாக, அதிகாலை யில் பஞ்ச மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடை பெற்றன. இதை யடுத்து, அலங்கரிக்கப்பட்ட 5 திருத்தோ்களில் விநாயகா், சுப்பிரமணியா், விருத்தகிரீஸ்வரா், விருத்தாம்பாள், சண்டிகேஸ்வரா் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினா்.

    தொடா்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளத்துடன் காலை 5:45 மணியளவில் தேரோட்டம் தொடங்கியது.

    முதலில் விநாயகா் தோ் புறப்பட்டது. இதையடுத்து, குறிப்பிட்ட நேர இடைவெளியில் மற்ற 4 திருத்தோ்களும் புறப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் பக்தி முழக்கத்துடன் தோ்களை வடம் பிடித்து இழுத்தனா்.

    விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான மாசி மகம் தீா்த்தவாரி மணிமுக்தா ஆற்றில் நாளை நடைபெறுகிறது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை தெப்ப உற்சவமும், திங்கட்கிழமை சண்டிகேஸ்வரா் சாமி வீதியுலா நடைபெற உள்ளது.

    • சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது.
    • டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.

    நெய்வேலி:

    நெய்வேலியில் இன்று ஜெயலலிதா முழு உருவ சிலையை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்.

    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நெய்வேலி நகர அ.தி.மு.க. மற்றும் என்.எல்.சி.அண்ணா தொழிலாளர்கள், ஊழியர்கள் சங்கம் சார்பில் நெய்வேலி டவுன்ஷிப் செவ்வாய் சந்தை அருகே ஜெயலலிதா முழு உருவ வெண்கல சிலை ரூ.10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை 9 அடி உயரம் கொண்டது. பீடம் 7 அடியில் அமைந்துள்ளது. இந்த சிலை திறப்பு விழா இன்று (வியாழக்கிழமை) மாலை நடைபெறுகிறது.

    இதற்கு கடலூர் தெற்கு மாவட்டசெயலாளர் சொரத்தூர் ராஜேந்திரன் தலைமை தாங்குகிறார். இதில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஜெயலலிதா சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள், மாநில, மாவட்ட, நகர ஒன்றிய, சார்பு பணி நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

    சிலை திறப்பு விழாவுக்காக வருகை தரும் எடப்பாடி பழனிசாமிக்கு கடலூர் தெற்கு மாவட்ட எல்லையான பணிக்கன்குப்பத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. தொடர்ந்து வழி நெடுகிலும் விளம்பர பேனர் கள், போஸ்டர்கள் மற்றும் தோரணங்கள், கட்சி கொடிகள், அலங்கார வளைவுகள் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே அமைக்கப்பட்டு சாலையின் இருபுறத்திலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் நின்று அவருக்கு வரவேற்பு அளிக்க உள்ளனர். மேலும் நெய்வேலி டவுன்ஷிப்பில் 500-க்கும் மேற்பட்ட மகளிரணியினர் பூரண கும்பமரியாதை அளிக்க உள்ளனர்.

    இது தவிர விழா மேடையும் அமைக்கப்பட்டுள்ளது. சிலையை திறந்துவைத்த பின்னர் எடப்பாடி பழனிச்சாமி விழா மேடை யில் பேச உள்ளார்.

    • மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது.
    • மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கும்பாபிஷேகம் செய்தார்.

    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் மிக பிரசித்திபெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வள்ளி, தெய்வானை உடனுறை முருகப்பெருமான் மயில் வடிவ மலையில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த முருகன் கோவிலுக்கு கடந்த 2012-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஐதீகம்.

    அதன்படி இக்கோவிலை புதுப்பிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி நடந்து வந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று (21-ந்தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

     முன்னதாக கும்பாபிஷேக விழாவிற்காக யாக சாலையில் பூஜைகள் நடைபெற்றது. இதனை மயிலம் மொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து இன்று காலை 6 மணியளவில் 6-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 9.15 மணியளவில் விநாயகர், பாலசித்தர், வள்ளி தெய் வானை உடனுறை முருகப் பெருமான் மற்றும் உற்சவ மூர்த்திகள் விமான கோபுர கலசத்தின் மீது மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சாமிகள் கலச நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தார். மாலை 6.30 மணிக்கு வள்ளி, தெய்வானை, முருகனுக்கு திருமண விழா நடைபெற உள்ளது.

    விழாவை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், குப்பாபிஷேகத்தை காணவரும் பக்தர்களின் வசதிக்காக விழுப்புரம், திண்டிவனம் மற்றும் புதுச்சேரியில் இருந்து மயிலத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப் பட்டது.

    கும்பாபிஷேக விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதினம் 20-ம் பட்டம் சிவஞான பாலய சாமிகள் தலைமையிலான பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • பாம்பை செல்லா பிடித்து வந்த போது வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பு படம் எடுத்தது.
    • பொதுவாக இது போன்ற வெள்ளை நிற நாகங்கள் இல்லை.

    கடலூர்:

    கடலூர் பச்சையாங் குப்பம் பகுதியில் ஹார்டு வேர்ஸ் கடை நடத்தி வருபவர் லெனின்.

    இவருடைய கடைக்குள் பாம்பு புகுந்து விட்டதாக வன ஆர்வலரான செல்லாவிற்கு தகவல் கொடுத்தார். அதனை தொடர்ந்து செல்லா கடைக்கு சென்று பார்த்த போது அது அரிய வகை வெள்ளை நிற நாகப்பாம்பு என்பது தெரிய வந்தது.

    அந்த பாம்பை செல்லா பிடித்து வந்த போது வெள்ளை நிறத்தில் இருந்த பாம்பு படம் எடுத்தது. இதனை அங்கு இருந்த மக்கள் ரசித்தனர். இந்த நிலையில் இந்த அரியவகை வெள்ளை நிற பாம்பு பாதுகாப்பாக காப்பு காட்டில் விடப்பட்டது.

    பொதுவாக இது போன்ற வெள்ளை நிற நாகங்கள் இல்லை என்றாலும் ஜீன் குறைபாடு காரணமாக ஓரிரு பாம்புகள் இது போன்று வெள்ளை நிறத்தில் இருப்பதாக வன ஆர்வலர் செல்லா தெரிவித்தார்.

    • கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட பெண் கொலை.
    • கணவர், அவரது தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு.

    கடலூர் மாவட்டம் ஆதிவராக நத்தம் ஆணவக் கொலை வழக்கில் 4 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2014ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்ட சீதா என்ற பெண்ணை கொலை செய்து உடலையும் எரித்தனர்.

    கொலை தொடர்பாக சீதாவின் கணவர் சரவணன், கணவரின் தாயார், சகோதரி, சகோதரியின் கணவர் என 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    கடலூர் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்த வழக்கில் கைதான 4 பேருக்கும் இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது.
    • பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தானே புயல் காரணமாக 30 நாட்கள் வரை பொதுமக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர். இதனை கருத்தில் கொண்டு அப்போதைய அரசு அடிக்கடி இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படும் மாவட்டமான கடலூர் மாவட்டத்தின் தலைநகர் கடலூருக்கு புதை வழி மின்சாரம் கொண்டு வந்தது. இதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக நடைபெற்ற பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் நகரின் ஒரு பகுதியில் மட்டும் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த புதைவட கேபிள் பணிகளுக்கான பியூஸ் கேரியர்கள் ஆங்காங்கே உள்ள பில்லர் பாக்ஸ்களில் அமைக்கப்பட்டிருக்கும்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை கடலூர் மஞ்சக்குப்பம், கோண்டூர் உள்ளிட்ட பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று அதிகாலை மின்சாரம் தடைபட்டது. மீண்டும் மின்சாரம் வந்து விடும் என்றிருந்த அப்பகுதியினர், விடிந்த பிறகும் மின்சாரம் வராததால் மின் துறையினரிடம் புகார் கொடுத்தனர்.

    அதன்பேரில் அவர்கள் வந்து பார்த்த போது பில்லர் பாக்ஸ்களிலிருந்து பியூஸ் கேரியர்களை காணவில்லை. இது தொடர்பாக அவர்கள் கடலூர் புதுநகர் போலீசாரிடம் புகாரளித்தனர். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் பில்லர் பாக்சினை திறந்து பியூஸ் கேரியர்களை எடுத்து சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட பியூஸ் கேரியர் ஒன்று ரூ.900 என்பதால் இதனை அவர்கள் திருடியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், பியூஸ் கேரியரை திருடிய 3 பேரையும் அடையாளம் காணும் பணியும், அவர்களை வலைவீசியும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை உருவாக்கியுள்ளது.

    • அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
    • சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலுவின் சிறப்பான சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

    பண்ருட்டி:

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜா ராம், பண்ருட்டி டி.எஸ்.பி. பழனி ஆகியோர் உத்தரவின்படி பண்ருட்டி பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    பண்ருட்டி குற்ற பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், திருவதிகை பாவாடை பிள்ளை நகராட்சி உயர்நிலைபள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் விஷ்வா என்ற மாணவனுக்கு சிகை அலங்காரம் செய்து, அவனுக்கு நல்ல பல ஆலோசனைகளை கூறி படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

    சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலுவின் சிறப்பான சேவையை பொதுமக்கள் பாராட்டினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
    • தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ளது வீராணம் ஏரி.

    இதன் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன.

    இந்த ஏரியால் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

    ஏரிக்கு மேட்டூர் நீர், கீழணையில் இருந்து வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டு நிரப்பப்படும். மழை காலங்களில் ஏரியின் நீர் பிடிப்பு பகுதியில் இருந்து காட்டாறுகள் மூலம் நீர் ஏரிக்கு தண்ணீர் வரும். தற்போது ஏரிக்கு நீர்வரத்து இல்லை. வெயிலும் அதிகரித்துள்ளது.

    இந்தச் சூழலில் சென்னைக்கு தொடர்ந்து தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. மேலும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம் 40.30 அடியாக உள்ளது.

    அதே நேரத்தில், தற்போது ஏரிக்கு நீர் வரும் 9 அடி உள்ள கீழணையில், 2.7 அடியாக குறைந்த அளவே தண்ணீர் உள்ளது.

    தற்போது சென்னைக்கு விநாடிக்கு 48 கனஅடியும், பாசனத்துக்கு விநாடிக்கு 100 கன அடியும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இது போல அனுப்பி வைக்கப்பட்டால் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்துவிடும். இதனால் ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்புவதை நிறுத்தும் நிலை ஏற்படும்.

    • சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது.
    • பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வடக்கு பெரியார் நகரில் உள்ள மணிமேகலை தெருவில் உதயா டிரேடர்ஸ் தொழிற்பயிற்சி மையத்தை மதுரையை சேர்ந்த சுந்தரம் என்பவர் நடத்தி வந்தார்.

    இங்கு அளிக்கப்பட்ட சுய தொழில் பயிற்சியில் சேர ஒரு நபருக்கு ரூ.5000/-வசூலிக்கப்பட்டது. மேலும், பயிற்சி முடித்தவர்கள் உற்பத்தி செய்யும் கப் சாம்பிராணி, கம்ப்யூட்டர் சாம்பிராணி, கிரயான்ஸ், கலர் பென்சில் போன்ற பொருட்களை எங்களிடமே விற்று மாதம் ரூ.30 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம், இதற்கான பயிற்சி அனைத்தும் இலவசம் எனவும் கூறி, ஒரு நாளைக்கு 875 ரூபாய் வருமானம் வரும் என்று கூறி விளம்பரம் செய்தார்.

    இதனை நம்பி விருத்தாசலத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் தலா ரூ.5000/-என சுந்தரத்திடம் கொடுத்தனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று தொடங்கப்படுமென பணம் கட்டிய பெண்களிடம் சுந்தரம் கூறியுள்ளார். இதனையேற்ற பெண்கள் பயிற்சி வகுப்பில் சேர சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு நேற்று காலை வந்தனர்.

    அப்போது அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. இதனைக் கண்ட பெண்கள் பயிற்சி மையத்தை தொடங்கி பணத்தை வசூலித்த சுந்தரத்தின் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் சுந்தரத்தில் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் பயிற்சி பெற பணம் செலுத்திய பெண்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

    இதனை அடுத்து பணம் கொடுத்து ஏமாந்ததை அறிந்த பெண்கள், கண்ணீர் மல்க தங்களின் குடும்பத்தாருடன் பூட்டப்பட்டிருந்த அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு உருவானது. இது குறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பயிற்சி மையத்தின் பூட்டை உடைத்த போலீசார், பயிற்சி மையத்திற்குள் சென்றனர். அங்கு எந்த பொருட்களும் இல்லாமல் காலியாக இருந்தது.

    தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து புகாரினை பெற்று, பயிற்சி மையத்தை தொடங்கி பெண்களிடம் பணம் வசூல் செய்த சுந்தரம் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான சுந்தரத்தை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். 

    ×