search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்? போலீசார் கூடுதல் பாதுகாப்பு
    X

    துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல்? போலீசார் கூடுதல் பாதுகாப்பு

    • துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.
    • குற்றப்பிரிவு போலீசார் விசாரணை.

    வேலூர்:

    வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார்.

    அவருடன் அவரது தந்தை அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்து கவனித்து வருகின்றனர். அவர் சிகிச்சை பெற்றும் வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்த நிலையில், சி.எம்.சி. மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று 10-ந் தேதி வந்த ஒரு மின்னஞ்சலில் 'துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் குறிப்பு இருந்துள்ளது.

    இதையடுத்து, மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில், வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாகவே புகார் அனுப்பி வைக்கப்பட்டது. மிரட்டல் விடுத்த நபர் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சி.எம்.சி. மருத்துவமனை ஏ-பிளாக்கிற்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 போலீசார் சீருடை அணியாமல் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

    இன்று காலை வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மருத்துவமனை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முழு நேரமும் கவனத்தோடு செயல்பட போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

    இதுதொடர்பாக காவல் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, அவர்கள் கூறியதாவது:-சி.எம்.சி. நிர்வாகம் அளித்த புகாரின்பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.போ

    அந்த மிரட்டல் மின்னஞ்சலில் இருந்த விவரம் மருத்துவமனை நிர்வாகம் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு மட்டுமே தெரியும். எங்களுக்கு எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    அதேநேரம், துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை தளத்துக்கு 3 போலீசார் பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் அங்கு கூடுதலாக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 4 பேர் அடங்கிய சீருடை அணியாத போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் நேற்று மாலையில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். மிரட்டல் மின்னஞ்சல் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×