search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பட்டாபிராம் மேம்பாலம் திறப்பதில் காலதாமதம்- பாஜக போராட்ட அறிவிப்பு
    X

    பட்டாபிராம் மேம்பாலம் திறப்பதில் காலதாமதம்- பாஜக போராட்ட அறிவிப்பு

    • திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.
    • பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.

    ஆவடி:

    சென்னையில் இருந்து திருவள்ளூர் செல்லும் நெடுஞ்சாலையின் குறுக்கே பட்டாபிராம் ரெயில்வே கேட் உள்ளதால் கடுமையாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்கு 6, வழித்தட ரெயில்வே மேம்பாலம் கட்ட கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் அடிக்கல் நாட்டினார். பணிகளை முழுமையாக முடிக்காமல் அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி வரும் சாலைபணிகள் இன்னும் முடிக்கப்படாமல் உள்ளது.

    இதனால் சென்னையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வாகனங்கள் தண்டுரை, சித்துக்காடு, அணை கட்டு சேரி, திருமணம், மீஞ்சூர்- வண்டலூர் வெளிவட்ட சாலை வழியாக சென்று கருணாகரச்சேரி, நெமிலிச்சேரி என பல கிராமங்களை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்லும் அவலநிலை உள்ளது.

    எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிகள் முடிவடைந்த ஒருவழிதடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும். இல்லையென்றால் விரைவில் பொதுமக்களை ஒன்று திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்போவதாகவும் விரைவில் இதற்கான தேதி அறிவிக்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது.

    Next Story
    ×