search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் ரூ.13.01 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்
    X

    கோவையில் ரூ.13.01 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்

    • அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்தார்
    • முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது.

    கோவை,

    தமிழக வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வைத் துறை அமைச்சர் முத்துசாமி கோவை மாநகராட்சி பகுதிகளில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

    முதலாவதாக சரவணம்பட்டி தனியார் கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன் வழங்கும் விழா நடந்தது. இந்த விழாவை அமைச்சர் முத்துசாமி தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கடன்களை வழங்கினார்.

    பின்னர் கோவை மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட சர வணம்பட்டி பூந்தோட்டம் நகரில் ரூ.72 லட்சம் மதிப்பீட்டில் ஸ்டெம் பூங்கா அமைக்கும் பணி, கோவை மாநகராட்சி 48-வது வார்டுக்கு உட்பட்ட சத்தி ரோட்டில் ரூ. 2.95 கோடி மதிப்பீட்டில் ஆம்னி பஸ் நிலையம் கட்டும் பணி, 69-வது வார்டுக்கு உட்பட்ட மேட்டுப்பாளையம் சாலை கிருஷ்ணசாமி சாலை மேற்புறத்தில் மழை நீர் வடிகாலுடன் கூடிய ரூ. 2 கோடியே 18 லட்சம் மதிப்பீட்டில் நடைபாதை கட்டுதல் பணியை தொடங்கி வைத்தார்.

    இதேபோன்று 72- வது வார்டுக்கு உட்பட்ட திருவேங்கடம் சாலை முதல் முத்தண்ணன் குளம் வரை ரூ. 1.47 கோடி மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் கட்டுதல், என்.யு.எச்.எம் நிதியின் கீழ் வ.உ.சி பூங்கா மைதானம் அருகில் உள்ள சாலையில் ஆரோக்கியமான சுகாதாரமான உணவு உள்ள தெரு ரூ. 1 கோடி மதிப்பில் அமைக்கும் பணி, 54 வது வார்டுக்கு உட்பட்ட காமராஜர் சாலை, அவிநாசி சாலை முதல் வரதராஜபுரம் சந்திப்பு வரை ரூ. 4.69 கோடி மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் கட்டும் பணிகள் உள்ளிட்ட ரூ.13.01 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி, மேயர் கல்பனா, மாநகராட்சி கமிஷனர் பிரதாப், துணை மேயர் வெற்றி செல்வன், தி.மு.க மாவட்ட செயலாளர்கள் நா.கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×