search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வளர்ச்சி திட்ட பணிகள்- எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    ஷா நவாஸ் எம்.எல்.ஏ. மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

    வளர்ச்சி திட்ட பணிகள்- எம்.எல்.ஏ. ஆய்வு

    • ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்ட பணிகளை ஷாநவாஸ் எம்.எல்.ஏ ஆய்வு செய்தார்.

    உத்தமசோழபுரம் ஊராட்சி பூதங்குடி கிராமம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட மரைக்கான் சாவடி பகுதியில் தலா ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து, கட்டுமாவடியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடம், கணபதிபுரம், அம்பல், திருக்கண்ணபுரம் ஊராட்சிகளில் தலா ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் பயணியர் நிழலகங்களையும் ஆய்வு செய்தார்.

    மேலும், திட்டச்சேரி, திருமருகல், மருங்கூர், கணபதிபுரம் அரசு பள்ளிகளுக்கு வழங்க ப்பட்ட பென்ஞ் டெஸ்க்கை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    குறிப்பாக திருமருகல் அரசு மேல்–நிலைப்பள்ளியில் சத்துணவு கூடத்தில் ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து மாணவர்களிடம் எம்.எல்.ஏ கேட்டறிந்தார்.

    ஆய்வின் போது, திருமருகல் தி.மு.க ஒன்றியச் செயலாளர்கள் செல்வ செங்குட்டுவன், சரவணன், வி.சி.க ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஒன்றிய ஆணையர் பாலமுருகன், திட்டச்சேரி பேரூராட்சி மன்றத் தலைவர் ஆயிஸா சித்தீக்கா, பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணன், பேரூராட்சி மன்ற உறுப்பினர் சுல்தான், ஒன்றிய பொறியாளர்கள் கவிதா ராணி, செந்தில் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உடனிருந்தனர்.

    Next Story
    ×