search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்கள்
    X

    பவுர்ணமியை முன்னிட்டு திருச்செந்தூரில் அகல் விளக்கு ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

    • பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
    • நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பவுர்ணமி தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

    அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று பவுர்ணமி தினத்தன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் தங்கி அகல் விளக்கு ஏற்றி வழிபாடு செய்துவிட்டு, இன்று காலையில் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    புரட்டாசி மாத பவுர்ணமி என்பதால் நேற்று கோவில் கடற்கரையில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அவர்கள் நேற்று இரவு கடற்கரையில் தங்கி வழிபாடு செய்தனர். பின்னர் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    இதற்காக இலவச பொது தரிசனம் மற்றும் ரூ.100 சிறப்பு தரிசன பாதையில் கூடுதலாக தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    கோவில் வளாகத்தில் பெருந்திட்ட வளாக பணிகள் நடந்துவருவதால் வாகனம் நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை. அதனால் நகரில் தற்காலிக வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டிருந்தது. இருந்தாலும் நகர் பகுதி மற்றும் நகரின் எல்லைகளில் ஆங்காங்கே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டி ருந்தன. அதேபோல் நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் வழித் தடங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்தராஜ் தலை மையில் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    Next Story
    ×