search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தருமபுரி பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து குறைவு
    X

    தருமபுரி பட்டுக்கூடு ஏல அங்காடிக்கு பட்டுக்கூடு வரத்து குறைவு

    • பட்டுக்கூடுகள் ரூ.11.17 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.
    • மழையின் காரணமாக பட்டுக்கூடு வரத்து குறைந்தது.

    தருமபுரி,

    தமிழகத்திலேயே மிகப்பெரிய பட்டுக்கூடு ஏல அங்காடி தருமபுரியில் அமைந்துள்ளது. இந்த பட்டுக்கூடு அங்காடிக்கு கன்னியாகுமரி, ராமநா தபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், சேலம், நாம க்கல், ஈரோடு, கரூர் கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பட்டுக்கூடு உற்பத்தி செய்யும் விவசாயிகள் பட்டுக்கூடு ஏலத்தில் கலந்து கொள்ளுகின்றனர்.

    தருமபுரி பட்டுக்கூடு அங்காடியில் மஞ்சள், வெள்ளை என தினசரி 5 முதல் 8 டன் வரையிலான பட்டுக்கூடுகள் ஏலம் விடப்படும். இந்நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஏலத்தில், 32 விவசாயிகள் கொண்டு வந்த 2660 கிலோ வெண் பட்டுக்கூடுகள் ரூ.11.17 இலட்சத்திற்கு ஏலம் விடப்பட்டது.

    நேற்று திடீரென பட்டுக்கூடு வரத்து குறைந்து 30 விவசாயிகள் கொண்டு வந்த 1939 கிலோ வெண் பட்டுக்கூடுகள் குறைந்தபட்சம் 505 ரூபாய்க்கும் அதிகபட்சம் 360 ரூபாய்க்கும் சராசரி 426 ரூபாய் என மொத்தம் 8.26 இலட்சத்திற்கு விற்பனை யானது.தருமபுரி மாவட்ட பட்டுக்கூடு அங்காடிக்கு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் இருந்து பட்டுக்கூடு வரத்து அதிகரித்த நிலையில் மழையின் காரணமாக திடீரென பட்டுக்கூடு வரத்து குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×