என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கைதான 2 வியாபாரிகள் வேறு யாரிடமும் கைவரிசை காட்டினார்களா?- போலீசார் தீவிர விசாரணை
- சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு ஸ்டேன்லி சாம்ராஜூடன் அறிமுகமாகி உள்ளார்.
- மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம், ஸ்டேன்லி சாம்ராஜ் புகார் அளித்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் பிரின்ஸ். இவருடைய மகன் ஸ்டேன்லி சாம்ராஜ் (வயது 47). இவர் சிமெண்ட், உப்பு மற்றும் இரும்பு பொருட்கள் ஆகியவைகளை மொத்தமாகவும், சில்லறையாகவும் வியாபாரம் செய்யும் நிறுவனம் நடத்தி வந்துள்ளார்.
ரூ.8 கோடி மோசடி
இவரது பள்ளி நண்பரான தூத்துக்குடி தாமோதரநகரை சேர்ந்த சீலன் செல்வராஜ் (46) என்பவர் கடந்த 2019-ம் ஆண்டு அறிமுகமாகி தான் உப்பு மற்றும் இரும்பு பொருட்களை வியாபாரம் செய்து வருவதாகவும், அவர் ஸ்டேன்லி சாம்ராஜூடன் சேர்ந்து வியாபாரம் செய்ய விரும்புவதாகவும் கூறி உள்ளார். மேலும் சீலன் செல்வராஜ் அவருடன் வியாபாரம் செய்துவரும் தூத்துக்குடியை சேர்ந்த விஜய் என்பவரையும் ஸ்டேன்லி சாம்ராஜ்க்கு அறிமுகப்படுத்தி உள்ளார்.
பின்னர் சீலன் செல்வராஜ், விஜய் ஆகியோர் ஸ்டேன்லி சாம்ராஜ் நிறுவனத்துக்கு உப்பு, இரும்புபொருட்கள் வாங்குவதாக போலியான கொள்முதல் ஆணையை காண்பித்தும், வியாபாரத்துக்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறி 2020-ம் ஆண்டில் இருந்து 2023-ம் ஆண்டு வரை ரூ.8 கோடியே 29 லட்சத்து 18 ஆயிரத்து 741 பணத்தை பெற்றுக் கொண்டு, எந்தவித வியாபாரமும் செய்யாமல் ஏமாற்றி உள்ளனர்.
கைது
இதுகுறித்து அறிந்த ஸ்டேன்லி சாம்ராஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் மாவட்ட குற்றப் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மேற்பார்வையில், மாவட்ட குற்றப் பிரிவு இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் சண்முகசுந்தரம், மோகன்ஜோதி ஆகியோர் விசாரணை நடத்தி சீலன்செல்வராஜ், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும் இதுபோல வேறு யாரிடமும் மோசடி செய்தார்களா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்