என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
- 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
- மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை காவி ரிக்கரையில் அமைந்துள்ள தீப்பாய்ந்தாள் அம்மன் கோவிலில் 131-வது ஆண்டாக தீமிதி திருவிழா நடைபெற்றது.
இதனை முன்னிட்டு, கூறைநாடு காக்கும் பிள்ளையார் கோயிலிருந்து பக்தர்களுக்கு விரதமிருந்து அலகு காவடி, சக்தி கரகம், சிவப்பு மஞ்சள் உடை உடுத்தி மேளதாள வாத்தியங்கள் முழங்க காளிஆட்டத்துடன் ஊர்வலமாக புறப்பட்டு, முக்கிய வீதிகள் வழியே வீதிஉலாவாக கோயிலை வந்தடைந்தனர்.
கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை 1000-த்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இதில் ஏராளமானோர் தங்கள் குழந்தைகளை தோளில் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விழாவில் மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர்.
கண்கவர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை செங்கமேட்டு தெரு நாட்டாமை ஞானசேகரன், பொருளாளர் செல்வம், கோயில் நிர்வாகிகள் லட்சும ணன், வெங்கட்ராமன், மற்றும் விழா குழுவினர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்