search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நூலகத்தில் வாசகர்களுக்கு மரக்கன்று வழங்கல்
    X

    நூலகத்தில் வாசகர்களுக்கு மரக்கன்று வழங்கப்பட்டது.

    நூலகத்தில் வாசகர்களுக்கு மரக்கன்று வழங்கல்

    • வழங்கப்பட்ட மரக்கன்று அனைத்தையும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதை கண்காணித்து மரமாக்க வேண்டும்.
    • சுகாதாரமான காற்று நல்ல மழை இயற்கை வளம் மற்றும் நோய் தொற்றில் இருந்து காப்பாற்ற அனைவரும் மரங்களை வளர்க்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் இயங்கும் பசுபதிகோவில் ஊர்ப்புற நூலகத்தில் தஞ்சாவூர் மாவட்ட கலெக்டரின் உத்தரவின் படி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக பசுபதிகோவில் ஊர்ப்புற நூலக வளாகத்தில் மரக்கன்று நடுதல் மற்றும் மரக்கன்று வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்க தஞ்சாவூர் மாவட்ட துணை தலைவரும் மற்றும் நூலகருமான முருகானந்தம் செய்து இருந்தார். கூட்டத்திற்கு அண்ணா மனு மலர்ச்சி ஊராட்சி நூலகர் பிச்சை ரெத்தினம் தலைமை தாங்கி வாசகர்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு மரகன்று வழங்கினார்.

    நூலகர் முருகானந்தம் நூலக வளாகத்தில் பள்ளி மாணவர்களை மரகன்று நட்டு மாண வர்களிடம்பேசுகை யில், மாவட்ட கலெக்டரின் உத்தரவுபடி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள், தன்னா ர்வர்கள் சார்பில் மாவட்டம் முழுவதும் மரக்கன்று நடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.

    அதன் ஒரு பகுதியாக நமது நூலகம் மற்றும் நமது கிராம பகுதிகளில் இந்த திட்டம் சிறப்பாக நடத்த ப்பட்டது. வழங்கப்பட்ட மரக்கன்று அனைத்தையும் பொது மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அதை கண்கா ணித்து மர மாக்க வேண்டும். நமக்கு சுகாதா ரமான காற்று நல்ல மழை இயற்க்கை வளம் மற்றும் நோய் தொற்றில் இருந்தும் காப்பாற்ற அனைவரும் மரங்களை வள ர்க்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில் சரவணன், தாமஸ் பீர்முகமது, தமிழ்ச்செல்வி மற்றும் வாச கர்கள், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×