search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா
    X

    மயிலாடுதுறை அரசு பள்ளியில் கலை திருவிழா நடைபெற்றது.

    அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா

    • பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடனம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட 36 போட்டிகள் நடைபெற்றன.
    • 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் வட்டார அளவிலான கலை திருவிழா மயிலாடுதுறை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி இணை கட்டிட வளாகத்தில் நடைபெற்றது.

    மயிலாடுதுறை ராஜகுமார் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா, இடைநிலை கல்வி அலுவலர் தியாகராஜன், தொடக்க கல்வி பார்த்தசாரதி மற்றும் லீலாவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அரசு பள்ளி தலைமை ஆசிரியை சீதாலட்சுமி, வேழமுறித்தான் பேட்டை தலைமை ஆசிரியை சாந்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஒருங்கிணைந்த திட்ட அலுவலர் ஞானசேகர், வளமைய மேற்பார்வையாளர் முருகையன், வட்டார கல்வி அலுவலர் பவுலின் கலை விழாவின் நோக்கம் குறித்து உரையாற்றினர்.

    முன்னதாக மயிலாடுதுறை வட்டார கல்வி அலுவலர் ஜானகி அனைவரையும் வரவேற்றார்.

    ஆத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் முத்துக்கணியன் மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பழனிவேல் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்.

    கலை திருவிழாவில் அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, நடனம், நாடகம், வில்லுப்பாட்டு உள்ளிட்ட 36 போட்டிகள் நடைபெற்றன.

    9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்கள் போட்டிகளில் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

    முடிவில் வட்டார கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி நன்றி கூறினார்.

    Next Story
    ×