search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழகம்- புதுவையில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-டி.ஆர்.பி ராஜா
    X

    தமிழகம்- புதுவையில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்-டி.ஆர்.பி ராஜா

    • மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.
    • இன்னும் 2 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும்.

    கோவை:

    கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

    விழாவுக்கு மாநகர் மாவட்ட தி.மு.க செயலாளர் நா.கார்த்திக் தலைமை தாங்கினார். இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கலந்து கொண்டு, மாவட்ட அலுவ லகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.பின்னர் அவர் நிருபர்களுக்கு அளி த்த பேட்டியில் கூறியதா வது:-

    கலைஞரின் நூற்றாண்டு விழாவையொட்டி, ஒட்டு மொத்த தமிழகமுமே கலை ஞரை கொண்டாடி வருகி றது. தமிழகத்தின் வளர்ச்சி க்கும், இந்தியாவில் ஜன நாயகம் காப்பாற்றப்படுவதற்கும் முதல் காரணம் கலைஞர் கருணாநிதி தான்.

    ஒட்டு மொத்த இந்திய அரசியலிலும் வெற்றியை மட்டுமே கண்ட தலைவர் கருணாநிதி ஆவார். இன்றைய நாளில் அவரை நாம் கொண்டாடி வருகி றோம்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுக ளில் எண்ணற்ற மகத்தான சாதனைகளையும், மக த்தான நலத்திட்டங்களையும் பொதுமக்களுக்கும், தாய்மார்களுக்கும், இளைஞர்களுக்கும் கொடுத்து வருகிறார்.

    பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. 40 தொகுதிகளிலும் மகத்தான வெற்றியை பெறும். இந்த வெற்றியை மக்கள் எங்களுக்கு கொடுப்பார்கள். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் மகத்தான வளர்ச்சியையும், பல மடங்கு அற்புதமான திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டுவார்.

    தேர்தலின் போது கொடு க்கப்பட்ட வாக்குறுதியை போல கோவை மிகப்பெரிய வளர்ச்சியை பெறும். சிறு, குறு தொழில்களில் பெரிய விடியல் அடுத்த கட்டமாக காத்திருக்கிறது. இன்னும் 2 ஆண்டுகளில் இதுவரை கண்டிராத திட்டங்கள் வரும்.

    இவ்வாறு அவர் தெரி வித்தார்.

    Next Story
    ×