search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடியில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வந்தார்.
    • தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டு சென்றார்.

    தூத்துக்குடி:

    நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். மேலும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இன்று மாலை முதல் மேற்கொள்ள உள்ள இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை தேசிய கொடி வழங்கி தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், அனிதா ராதா கிருஷ்ணன், கீதாஜீவன், மனோ தங்கராஜ், கலெக்டர் செந்தில்ராஜ், டி.ஆர்.பாலு எம்.பி. நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சபாநாயகருமான ஆவுடையப்பன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் அவரை வரவேற்றனர்.

    வரவேற்பு நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப் எம்.எல்.ஏ., ராதாபுரம் அலெக்ஸ் அப்பாவு, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ.,

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ், மாநில நெசவாளர் அணி செயலாளர் பெருமாள், இந்து சமய அறநிலையத்துறை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர், இ.நடராஜன், நெல்லை கிழக்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் காசி ராஜன், அரசு ஒப்பந்ததாரர் மனோஜ்,

    நெல்லை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் செல்வ லெட்சுமி அமிதாப், சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் அமிதாப், நெல்லை மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, நெல்லை மாநகர துணைச்செயலாளர் சுதா மூர்த்தி, பாளை யங்கோட்டை ஒன்றிய குழு தலைவர் கே.எஸ். தங்கப்பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பரமசிவ அய்யப்பன், முன்னாள் எம்.பி. ஜெயத்துரை, மாநில இளைஞர் அணி துணைச்செயலாளர் வக்கீல் ஜோயல்,

    தென்காசி தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் சிவபத்ம நாதன், செல்லத்துரை, ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன், கரையாளனூர் அரசு ஒப்பந்ததாரர் சண்முகவேலு, முன்னாள் எம்.பி.விஜிலா சத்தியானந்த், முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தச்சை பகுதி செயலாளர் சுப்பிரமணியன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், நெல்லை கூட்டுறவு பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, ஆறுமுக ராஜா,

    நெல்லை கிழக்கு மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் எரிக்ஜூட் பாண்டியன், வள்ளியூர் தெற்கு ஒன்றிய துணைச்செயலாளர் இளங்கோவன், கிழக்கு மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் மந்திரம், தகவல் தொழில் நுட்ப அணி லெட்சுமணன், தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் சந்திரசேகர், பிரம்மதேசம் ஊராட்சி தலைவர் ராமசங்கர், துணை தலைவர் கோமதி, தெற்கு நாங்குநேரி ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா பாபு, தென்காசி வடக்கு மாவட்ட புன்னயைாபுரம் ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிபட்டி மணிகண்டன், கண்ணநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மகாராஜன், துணைத்தலைவர் ராணி செல்வி,

    தூத்துக்குடி யூனியன் சேர்மன் வசுமதி அம்பா சங்கர், பஞ்சாயத்து தலைவர்கள் சரவணகுமார், ஹரி பாலகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் அவர் கார் மூலம் நெல்லை வழியாக கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது சாலையின் இருபுறமும் ஏராளமான தி.மு.க. தொண்டர்கள், நிர்வாகிகள் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    Next Story
    ×