search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செங்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டம்
    X

    பொதுக்கூட்டம் நடைபெற்றபோது எடுத்த படம்.

    செங்கோட்டையில் தி.மு.க. பொதுக்கூட்டம்

    • கூட்டத்தில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் சிறப்புரையாற்றினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    செங்கோட்டை:

    செங்கோட்டையில் நகர தி.மு.க. சார்பில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர செயலாளர் வழக்கறிஞர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நகர அவைத்தலைவர் காளி, நகர துணை செயலாளர்கள் ஜோதிமணி, முத்து சரோஜா, ராஜா, மாவட்ட பிரதிநிதிகள் பாஞ்ச் பீர்முகம்மது, மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் தில்லை நடராஜன் வரவேற்று பேசினார். மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாநில சட்டப்பிரிவு துணை செயலாளர் சூர்யா வெற்றிகொண்டான், மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    மாவட்ட அவைத்தலைவர் சுந்தரமகாலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆறுமுகசாமி, சேக் தாவூது, சேசுராஜன், மாவட்ட துணை செயலாளர்கள் கென்னடி, கனிமொழி, மாவட்ட பொருளாளர் ஷெரிப், பொதுக்குழு உறுப்பினர்கள் ரஹீம், சாமித்துரை, ராஜேஸ்வரன், தமிழ்செல்வி, அருள், செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், தென்காசி கிழக்கு ஒன்றிய செயலாளர் அழகு சுந்தரம், மேற்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி, கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, தென்காசி யூனியன் சேர்மன் ஷேக் அப்துல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட பிரதிநிதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    Next Story
    ×