search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நினைவு நாளையொட்டி  தூத்துக்குடியில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினர்
    X

    அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் வந்த போது எடுத்தபடம். அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளார்.

    கருணாநிதி நினைவு நாளையொட்டி தூத்துக்குடியில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்- அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி மலர் அஞ்சலி செலுத்தினர்

    • கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அமைதி ஊர்வலம் நடந்தது
    • கருணாநிதி சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

    தூத்துக்குடி:

    தி.மு.க. முன்னாள் தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான கருணாநிதியின் 4-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் புதிய பேருந்துநிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்துடன் அமைதி ஊர்வலம் நடந்தது.

    அஞ்சலி

    வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில் புறப்பட்டு கலைஞர் அரங்கம் முன்புள்ள அவரது சிலைக்கு அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினர்.

    நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணைச்செலயாளர் துறைமுகம் புளோரன்ஸ், மாவட்ட துணை செயலாளர்கள் ராஜ்மோகன்செல்வின், ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் மதியழகன், அந்தோணிஸ்டாலின், அன்பழகன், ரமேஷ், கஸ்தூரி தங்கம், உமாதேவி, பிரபு, மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, பகுதி செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், சுரேஷ்குமார், ரவீந்திரன், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ம.தி.மு.க.

    ம.தி.மு.க. சார்பில் மாநில மீனரவணி செயலாளர் நக்கீரன், தொண்டரணி துணை அமைப்பாளர் பேச்சிராஜ், மகாராஜன், சரவணபெருமாள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாப்பிள்ளையூரணி சிலோன்காலணியில் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதி படத்திற்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தலைமையில் மலர் அஞ்சலி செலுத்தி வணங்கினார்.

    நிகழ்ச்சியில் கூட்டுறவு கடன் சங்க துணைத்தலைவர் சிவக்குமார், ஓன்றிய கவுன்சிலர் அந்தோணி தனுஷ்பாலன், தெற்கு மாவட்ட தி.மு.க. சுற்றுசூழல் அணி மாவட்ட செயலாளர் ரவி என்ற பொன்பாண்டி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கபாண்டி, நிர்வாகிகள் காமராஜ், ஜோதிடர் முருகன், பொன்னுசாமி, ஆசைத்தம்பி, திருமணி, பிரபாகர், அன்பு, காசி, வேல்ராஜ், ஜெபராஜ், ஆரோக்கியமேரி, ஜெஸிந்தா, கௌதம், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×