search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கர்நாடக தேர்தலில் எதிரொலித்த தி.மு.க.வின் வாக்குறுதிகள்-கோவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி
    X

    கர்நாடக தேர்தலில் எதிரொலித்த தி.மு.க.வின் வாக்குறுதிகள்-கோவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி

    • கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
    • கோவையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசுப் பொருள் காட்சியை இரண்டரை லட்சம் மக்கள் பார்வையிட்டனர்.

    கோவை,

    கோவை காந்திபுரம் மத்திய சிறை மைதானத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன அரசுப் பொருட்காட்சியை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திறந்து வைத்து பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அரசின் பல்வேறு துறைகளில் மக்களுக்காக ஆற்றி வரும் பணிகள் குறித்து மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பொருள் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. கோவையில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசுப் பொருள் காட்சியை இரண்டரை லட்சம் மக்கள் பார்வையிட்டனர். இதன் மூலம் ரூ.36 லட்சம் வருவாய் அரசுக்கு கிடைத்தது. இந்தப் பொருட்காட்சி மூலம் அரசுத் திட்டத்தை மக்கள் எவ்வாறு பெற வேண்டும் என்ற தெளிவு கிடைக்கிறது. இதனால், பொருள்காட்சி மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவிகள், குழந்தைகள் குடும்பத்தோடு வந்து காணும் விதமாக பொருள்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்கெனவே கூறப்பட்ட கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. தமிழகத்தில் தி.மு.க. அறிவித்த வாக்குறுதிகள் கர்நாடகத்தில் எதிரொலித்துள்ளது. இதேபோல, மற்ற மாநிலங்களிலும் மாற்றம் ஏற்படும். தென்மாநிலங்கள் பாஜகவைப் புறக்கணித்துள்ளதைப் போல மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் போது, வடக்கு மாநிலங்களிலும் மாற்றம் ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாநகராட்சி ஆணையர் பிரதாப், கோவை மாநகர மாவட்ட தி.மு.க. செயலாளர் நா.கார்த்திக், மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டடோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×