search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா: திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம்
    X

    மருத்துவ முகாம் நடந்தபோது எடுத்த படம்.

    டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்தநாள் விழா: திருச்செந்தூர் கோவில் வளாகத்தில் இலவச மருத்துவ முகாம்

    • முகாமை டாக்டர்கள் லஷ்மிகாந்த், சச்சின்ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
    • இலவச மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம் போன்றவை டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

    திருச்செந்துர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் பிறந்த நாளை முன்னிட்டு பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமை டாக்டர்கள் லஷ்மிகாந்த், சச்சின்ராஜா ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். பின்னர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்த இலவச மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, உடல் வெப்பநிலை போன்றவை டாக்டர்களால் பரிசோதிக்கப்பட்டு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டன. மேலும் முகாமில் விளக்கப்படங்கள் மூலம் உடல்நலக் கல்வி வழங்கப்பட்டது.

    முகாமில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜ், கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி, கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், 3-ம் ஆண்டு மாணவிகள் கலந்து கொண்டனர். காலை 10 மணி முதல் 3 மணி வரை நடந்த இம்முகாமில் 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். முகாம் ஏற்பாடுகளை கல்லூரி இணைபேராசிரியை சங்கீதா, துணை பேராசிரியை வனிஷா ஆகியோர் கல்லூரி முதல்வரின் வழிகாட்டலின்படி செய்திருந்தனர்.

    Next Story
    ×