என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரணியல் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்20 July 2022 7:54 AM GMT
- விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார்
- மனைவி வாணி அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை
கன்னியாகுமரி :
இரணியல் அருகே தலக்குளம் கீழவிளை என்ற இடத்தை சேர்ந்த வர் சுபாஷ் (வயது 35). வாடகைக்கு வேன் ஓட்டி வந்தார்.
இவர் கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. இதனை அவரது மனைவி வாணி மற்றும் உறவினர்கள் கண்டித்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் மருத்துவர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.
இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வாணி அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X