search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இரணியல் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை
    X

    இரணியல் அருகே டிரைவர் விஷம் குடித்து தற்கொலை

    • விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார்
    • மனைவி வாணி அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே தலக்குளம் கீழவிளை என்ற இடத்தை சேர்ந்த வர் சுபாஷ் (வயது 35). வாடகைக்கு வேன் ஓட்டி வந்தார்.

    இவர் கடந்த சில நாட்களாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலை செய்யவில்லை என்று தெரிகிறது. இதனை அவரது மனைவி வாணி மற்றும் உறவினர்கள் கண்டித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷம் அருந்தி வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை க்காக சேர்த்தனர் மருத்துவர் கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார்.

    இது குறித்து இரணியல் போலீஸ் நிலையத்தில் அவரது மனைவி வாணி அளித்த புகாரின் பேரில் இரணியல் சப்இன்ஸ்பெக்டர் தனிஸ்லாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    Next Story
    ×