search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமுகை அருகே டிராக்டர் மோதி டிரைவர் சாவு
    X

    சிறுமுகை அருகே டிராக்டர் மோதி டிரைவர் சாவு

    • டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார்.
    • சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேட்டுப்பாளையம்,

    சிறுமுகை அருகே உள்ள பொகளூர் பகுதியைச்சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் கந்தசாமி (வயது69). இவர் மினி லாரி வைத்து ஓட்டி வருகிறார்.

    இந்த நிலையில் அவர் நேற்று மினி லாரியில் சென்றார். அப்போது பொகளூர் அருகே இவர் வாகனத்தை அசுர வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. இதனால் வாகனம் நிலைதடுமாறி விபத்துக்கு உள்ளானது. எனவே டிரைவர் கந்தசாமி உயிர் தப்புவதற்காக, மினி லாரியில் இருந்து கீழே குதித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக டிராக்டர் மீது மோதி படுகாயம் அடைந்தார்.

    எனவே அவரை சிறுமுகை போலீசார் மீட்டு, மேட்டுப்பாளையம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருந்து டிரைவர் கந்தசாமி, மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கந்தசாமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்து உள்ளனர். இது குறித்து சிறுமுகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×