search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    குடிபோதையில் வாலிபர்கிணற்றில் குதித்து தற்கொலை
    X

    குடிபோதையில் வாலிபர்கிணற்றில் குதித்து தற்கொலை

    • தந்தை இறந்த துக்கம் தாளாமல் குடிபோதையில் வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை
    • இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    குன்னம்,

    பெரம்பலூர் மாவட்டம் குன்னம், எழுமூர் கிராமம் தெற்கு தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சரவணன் (வயது 20). ஊரை சுற்றி வந்த இவருக்கு அவரின் தந்தை குமார் புத்திமதி சொல்லி உள்ளார். இதன் பேரில் சரவணன் சென்னைக்கு சென்று ஹோட்டல் ஒன்றில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் சரவணன் தந்தை காலமானார். இந்த சோகம் சரவணனை வாட்டி வதைத்து வந்துள்ளது.

    சென்னையில் இருந்து விடுமுறைக்காக ஊர் திரும்பிய சரவணன், கீழபுலியூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்து உள்ளார். போதை தலைகேறிய நிலையில், அவருக்கு தந்தையின் நினைப்பு வந்துள்ளது. இதனால விரக்தி அடைந்த அவர் எழுமூர் பெருமாள் கோவில் அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் காப்பாற்ற முயன்றனர். ஆனால் கிணற்றுக்கு அடியில் உடல் சென்று விட்டதால் மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலில் பேரில் அங்கு வந்த மங்களமேடு போலீசார்,வேப்பூர் தீயணப்புத்துறையினர் உதவியுடன் உடலை மீட்டனர். இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    Next Story
    ×