என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் குடிபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது.
- சதிஷ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை,
தஞ்சை மாவட்டம் கீழவாசல் பகுதியை சேர்ந்தவர் சதிஷ்குமார் (வயது 35). இவர் கோவை கோவில்பாளையத்தில் தங்கி வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி புஷ்பா (21). இவர்களுக்கு கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
இந்நிலையில் சதிஷ்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் தினமும் இவர் மது குடித்து விட்டு வந்து இவரது மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று சதிஷ்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்- மனைவி இருவருக்கும் இடையே தகராறு ஏற்ப்பட்டது. அப்போது வீட்டில் தனியாக இருந்த சதிஷ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பின்னர் இது குறித்து கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட சதிஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்