என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
கோவையில் குடிபோதையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
- தந்தையிடம் தனது சொந்த தொழிலைத் தொடங்க உதவுமாறு கேட்டார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை,
கோவை கருமத்தம்பட்டி இளச்சிபாளையத்தை சேர்ந்தவர் குருசாமி (வயது64). இவரது மகன் பிரகாஷ் (31). இந்நிலையில் பிரகாஷூக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து தனது தந்தையிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். சம்பவத்தன்று பிரகாஷ் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார்.
அப்போது அவர் தந்தையிடம் தனது சொந்த தொழிலைத் தொடங்க உதவுமாறு கேட்டார். ஆனால் அவரது தந்தை மறுத்துவிட்டார், இதனால் ஆத்திரம் அடைந்த பிரகாஷ் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தையும் உடைத்தார். இதனையடுத்து வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பிரகாஷ் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்