search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தொடர்மழையால் விளைச்சல் பாதிப்பு கேரட், பீன்ஸ் விலை உயர்வு
    X

    தொடர்மழையால் விளைச்சல் பாதிப்பு கேரட், பீன்ஸ் விலை உயர்வு

    • தமிழகத்தில் ஊட்டி, மேட்டுப்பாளையம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
    • இதன் காரணமாக சேலம் மாவட்டத்துக்கு கேரட், பீன்ஸ் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது.

    சேலம்:

    தமிழகத்தில் ஊட்டி, மேட்டுப்பாளையம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் கேரட் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் கேரட் தமிழகத்தில் சேலம் மாவட்டம் உள்பட பல பகுதிகளுக்கும், இதை தவிர வட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதேபோல் ஓசூர், பெங்களூரு பகுதிகளில் பீன்ஸ் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கிருந்து சேலம் மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களுக்கு பீன்ஸ் லோடு அனுப்பப்படுகிறது.

    இந்த நிலையில் பெங்களூரு, ஓசூரில் பெய்து வரும் தொடர் மழையால் பீன்ஸ் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக சேலம் மாவட்டத்துக்கு கேரட், பீன்ஸ் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளது. கடந்த ஜூலை மாதம் ரூ. 60க்கு விற்ற பீன்ஸ் தற்போது ரூ.78 முதல் ரூ.80 என்றும், ரூ.60க்கு விற்ற கேரட் ரூ.85 முதல் ரூ.90 வரை என விலை உயர்ந்துள்ளது.

    Next Story
    ×