search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வரத்து குறைவால்  தருமபுரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்வு
    X

    வரத்து குறைவால் தருமபுரி மார்க்கெட்டில் முருங்கைக்காய் விலை உயர்வு

    • முருங்கைக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • மேச்சேரி பகுதியில் இருந்து வரும் முருங்கைக்காய் தருமபுரி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    தருமபுரி,

    தமிழர்களின் அனைத்து வைபவங்களிலும், பாரம்பரிய உணவிலும் முக்கிய அங்கம் வகிப்பது முருங்கை க்காய். பெரும்பாலும் முருங்கைக்காய் வருடம் முழுவதும் கிடைக்கும் வகையில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

    தருமபுரி மாவட்டத்தில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளான, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர், பென்னாகரம் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே முருங்கைக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புறங்களில் அனைத்து வீடுகளிலும் வீட்டிற்கு ஒரு மரம் என முருங்கை வளர்க்கப்படுகிறது.

    தற்போது தருமபுரி மாவட்டத்தில் முருங்கை சீசன் இல்லாததால் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி பகுதியில் இருந்தும், மேட்டூர் மேச்சேரி பகுதியில் இருந்து வரும் முருங்கைக்காய் தருமபுரி மாவட்ட மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

    தற்பொழுது விளைச்சல் குறைவால் தருமபுரி மாவட்டத்திற்கு முருங்கைக்காய் வரத்து குறைந்துள்ளது. அதனால் 30 ரூபாயிலிருந்து 35 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட முருங்கைக்காய் தற்போது தருமபுரி உழவர் சந்தையில் 60 ரூபாய்க்கும், வெளி மார்க்கெட்டில் 75 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    Next Story
    ×