search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்
    X

    மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம்

    • நாளை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.
    • மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் மனு அளிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தஞ்சை நகரிய உதவி செயற்பொறியாளர் மணிவண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை நகர் பொதுமக்கள் நலன் கருதி மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை ( செவ்வாய்க்கிழமை) தஞ்சை கோர்ட்டு சாலையில் உள்ள நகரிய செயற்பொ றியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது.

    எனவே தஞ்சை நகரிய கோட்டத்திற்கு உட்பட்ட நகர் எல்லையான தெற்கு வீதி, வடக்கு வீதி, மேல வீதி, கரந்தை, பள்ளியக்கிரஹாரம், கீழவாசல், தொல்காப்பியர் சதுக்கம் ,மேரீஸ் கார்னர், அருளானந்த நகர், பர்மா காலனி ,நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்தம்மாள் நகர் ,பழைய வீட்டு வசதி வாரியம், காந்திஜி ரோடு, மருத்துவக் கல்லூரி ரோடு, நீலகிரி, மானோஜிபட்டி, ரகுமான் நகர், ரெட்டிபாளையம் ரோடு, சிங்கப்பெருமாள் கோவில், ஜெபமாலைபுரம், வித்யா நகர், மேல வெளி பஞ்சாயத்து, தமிழ் பல்கலைக்கழக வளாக குடியிருப்பு, மாதா கோட்டை சாலை, புதிய பஸ் நிலையம், திருவேங்கட நகர், இனாத்துகான்பட்டி, நட்சத்திரா நகர், நாஞ்சிக்கோட்டை ஆகிய இடங்களை சேர்ந்த மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் நேரில் வந்து மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×