search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி அருகே இன்று முதல் அமல்-மேலூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று சென்றன
    X

    தூத்துக்குடி அருகே இன்று முதல் அமல்-மேலூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் நின்று சென்றன

    • புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
    • சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் மேலூரில் நின்று சென்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மேலூா் ரெயில் நிலையம், 2-வது ரெயில்வே கேட் அருகே இருந்து புதிய பஸ் நிலையம் அருகில் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய ரெயில் நிலையம் இன்று காலை முதல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்நிலையில் மேலூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை முதல் முறையாக வண்டி எண் 12693 சென்னை-தூத்துக்குடி முத்துநகர் அதிவிரைவு ரெயில் நின்று சென்றது. அதில் இருந்து மகிழ்ச்சியோடு பயணிகள் இறங்கி சென்றனர். அனைத்து ரெயில்களும் மேலூா் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×