search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கோவையில் கார் மோதி மூதாட்டி பலி
    X

    கோவையில் கார் மோதி மூதாட்டி பலி

    • மூதாட்டி 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.
    • இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நீலாம்பூர்,

    கோவை ஒண்டிப்புதூரை சேர்ந்தவர் பொன்கிஆத்தால் (வயது72). சம்பவத்தன்று இவர் அவரது அக்கா வீட்டுக்கு சென்று விட்டு சேலம்-கொச்சின் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது அடையாளம் தெரியாத கார் இவர் மீது வேகமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் 20 மீட்டர் தூரம் அளவிற்கு தூக்கி வீசப்பட்டார்.

    இதில் படுகாயமடைந்த மூதாட்டி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த சூலூர் போலீசார் பொன்கிஆத்தாலை கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் பொன்கி ஆத்தால் மீது கார் மோதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி தற்போது அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்ப டுத்தி உள்ளது. இந்த விபத்து குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×