search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலி
    X

    திருமணமாகி 7 நாட்களே ஆன நிலையில் புதுமாப்பிள்ளை மின்சாரம் தாக்கி பலி

    • கார்த்திகேயன் பாத்ரூம் போக சுவிட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கி அலறி அடித்து விழுந்தார்.
    • திருமணமான 7 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி சி.கே.ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 25). அதே பகுதியில், பேட்டரி கடை நடத்தி வருகிறார்.

    அதே ஊரைச் சேர்ந்த இவரது அக்கா மகள் ஸ்ரீப்ரியா (வயது19), இருவருக்கும் கடந்த 7 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கார்த்திகேயன் பாத்ரூம் போக சுவிட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கி அலறி அடித்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி ஸ்ரீபிரியா மற்றும் கார்த்திகேயன் குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்த கார்த்திகேயனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×