என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
மின்வாரிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி சாவு
- தருமபுரியில் ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
- மனைவியும், 2 மகளும், 2மகன்களும் உள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டி அருகே உள்ள பள்ளத்து கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் நஞ்சன் (வயது49). இவர் மின்சாரத் துறையில் ஒப்பந்த ஊழியராக பணி செய்து வந்தார். இவருக்கு திருமணமாக ராணி (45) என்ற மனைவியும், 2 மகளும், 2மகன்களும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு மேல் தருமபுரி-ஓசூர் சாலையில் கடகத்தூர், அடுத்த தனியார் ஹாலோ பிளாக் கம்பெனி எதிரில் உள்ள காவேரி அம்மாள் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் நஞ்சனும், சக ஊழியரான சத்தியமூர்த்தி ஆகிய 2 பேரும் மின் கம்பம் மாற்றி அமைத்து மின்சார வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது மின் பாதை ஆய்வாளர் மின்சாரத்தை ஆன் செய்ததாக தெரிகிறது.
இதில் நஞ்சன் மீது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். உடன் வேலை செய்த சத்தியமூர்த்தி லேசான காயங்களுடன் உள்ள நிலையில் இருவரை–யும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனும–தித்தினர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நஞ்சன் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்