search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சத்தியமங்கலம் பகுதியில் சாலையில் உலா வரும் யானைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி
    X

    சத்தியமங்கலம் பகுதியில் சாலையில் உலா வரும் யானைகளால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

    • சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
    • இரவு நேரங்களில் சாலை ஓரமாக யானைகள் உலா வருகிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் யானை, மான், புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவி லங்குகள் வசித்து வருகின்றன. இந்நிலையில் மழைக்காலங்கள் என்பதால் யானைகள் அதிகமாக இடம் பெயர்ந்து வருகின்றன.

    தற்பொழுது வனத்துறையில் கிடைத்த தகவலின் படி கர்நாடக வனப்பகுதியில் இருந்து யானைக் கூட்டங்கள் மிகவும் அதிக அளவில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

    இதனால் ஆசனூர், தாளவாடி உள்ளிட்ட மலைப்பகுதியில் உள்ள வனச்சாலையில் யானைகள் அதிகமாக தென்படுகின்றன. குறிப்பாக பண்ணாரி அம்மன் கோவில் அருகே உள்ள வனச்சாலையில் கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலை ஓரமாக யானைகள் உலா வருகிறது.

    இதனால் பண்ணாரி அம்மன் சாலையை கடக்கும் வாகன ஓட்டிகள் கவனத்துடனும் எச்சரிக்கை யுடனும் செல்ல வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். எக்காரணம் கொண்டும் வாகனங்களை சாலையோரம் நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×