search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    வேலைவாய்ப்பு முகாம்
    X

    வேலைவாய்ப்பு முகாம்

    • மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந் தேதி, பாவை என்ஜினீயரிங் கல்லூரியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெறுகிறது.
    • இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 18-ந் தேதி, பாவை என்ஜினீயரிங் கல்லூரியில், கலெக்டர் ஸ்ரேயாசிங் தலைமையில் நடைபெறுகிறது.

    முகாமில் 5-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐ.டி.ஐ பட்டதாரிகள் மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகளும், கம்ப்யூட்டர் பயிற்சி, தையற்பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொள்ளலாம். இம்முகாம் முற்றிலும் இலவசமானது. இம்முகாமில் 200-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட பணி காலியிடங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். வேலை வேண்டி விண்ணப்பிப்போர், தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். வேலையளிப்போரும், வேலை தேடுபவர்களும் முகாம் தொடர்பான விவ–ரங்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×