search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மது குடிக்க பணம் தராததால் தீக்குளித்த முதியவர் சாவு
    X

    மது குடிக்க பணம் தராததால் தீக்குளித்த முதியவர் சாவு

    • மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார்.
    • பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    அந்தியூர்,

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (65). மரம் வெட்டும் தொழிலாளியான இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படு கிறது.

    இந்த நிலையில் கோவிந்தராஜ் கடந்த வாரம் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதையடுத்து அவர் மீண்டும் மது குடிக்க பணம் கேட்டு வீட்டில் தகராறு செய்தார். ஆனால் வீட்டில் உள்ளவர்கள் பணம் தர மறுதது வட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் திடீரென மண் எண்ணையை எடுத்து தனது உடலில் ஊற்றி கொண்டு வீட்டில் உள்ளவர்களிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் அவருக்கு பணம் கொடுக்க மறுத்ததால் கோவிந்தராஜ் தன் உடலில் தீ வைத்துக் கொண்டார்.

    இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு இருந்து மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சைக்குசேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை கோவிந்தராஜ் பரிதாபமாக இறந்தார்.

    Next Story
    ×