search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கஞ்சா செடி வளர்த்தவர் கைது
    X

    கஞ்சா செடி வளர்த்தவர் கைது

    • ஈரோடு கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியில் வீட்டிற்கு அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
    • இதையடுத்து முத்துசாமியை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து அவர் வளர்த்த 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கே.என்.பாளையம் நரசபுரம் பகுதியில் வீட்டிற்கு அருகே கஞ்சா செடி வளர்ப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதன்பேரில் பங்களாபுதூர் சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ், மதுவிலக்கு சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் சம்பவ இடத்துக்கு ரோந்து சென்றனர்.

    அப்போது நரசபுரம் பகுதியில் முத்துசாமி (31) என்பவர் அவரது வீட்டிற்கு அருகே உள்ள காலி இடத்தில் செடிகளுக்கு இடையே துணியை கட்டி மறைத்து கஞ்சா செடியை வளா்த்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து முத்துசாமியை பங்களாபுதூர் போலீசார் கைது செய்து அவர் வளர்த்த 3 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×