search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்
    X

    ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்

    • அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம் கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது.
    • இதில் குறைந்தபட்சம் 75 முதல் அதிகபட்சம் 94 ரூபாய் வரைக்கும் ஏலம் விலை போனது. இந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் அத்தாணி சாலை வாரச்சந்தை எதிர்ப்புறம் அமைந்துள்ளது. இதில் விவசாயிகளின் விலை பொருட்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை நடைபெறும்.

    அந்த வகையில் தற்போது பருத்தி வரத்து அந்தியூர் தவிட்டுப்பாளையம், வெள்ளியம்பாளையம், வட்டக்காடு, புதுக்காடு, காந்திநகர், சங்கரா பாளையம், எண்ணமங்கலம், சின்னத்தம்பிபாளையம், பச்சம்பாளையம், கள்ளிமடை குட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட பருத்தி வெள்ளிக்கிழமை முதல்திங்கட்கிழமை வரை ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடத்தில் வைக்கப்பட்டு அதன் ஏலம் திங்கட்கிழமை காலை அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ஞானசேகர் முன்னிலையில் நடைபெற்றது.

    இந்த ஏலத்தில் புளியம்பட்டி, அன்னூர், கொங்கணாபுரம், சத்தியமங்கலம், அவிநாசி, ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தியின் விளைச்சலுக்கு ஏற்றவாறு விலை நிர்ணயிக்கப்பட்டது.

    இதில் குறைந்தபட்சம் 75 முதல் அதிகபட்சம் 94 ரூபாய் வரைக்கும் ஏலம் விலை போனது. இந்த வாரம் மட்டும் சுமார் ரூ.3 கோடிக்கு பருத்தி ஏலம்நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×