search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    பசுமை தின விழா கொண்டாட்டம்
    X

    மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகள் ஓவிய போட்டியில் பங்கேற்ற காட்சி. 

    பசுமை தின விழா கொண்டாட்டம்

    • ஈரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.
    • மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.கே.சி. ரோட்டில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பசுமை தின விழா கொண்டாடப்பட்டது.

    பசுமையை போற்றும் வகையில் பசுமை உலக சுற்றுப்புற சூழல் குறித்தும், மழை வளம் வேண்டியும் , புவி வெப்பமயமாதலை தடுக்க மாணவர்கள் மேற்கொ ள்ள வேண்டிய முயற்சிகள் பற்றி கவிதை, கட்டுரை, பாடல்கள் மூலம் மாணவ -மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மரத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு நாடகம் நடத்தப்பட்டது. மேலும் ஓவிய போட்டியில் பங்கேற்று மரங்கள் குறித்து வரைந்தனர்.

    எல்.கே.ஜி. முதல் 8-ம் வகுப்பு வரை மாணவ-மாணவிகள் பசுமை தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பா டுகளை தலைமை யாசிரியர் சுமதி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×