search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய போலீஸ் குடியிருப்பு திறப்பு விழா
    X

    புதிய போலீஸ் குடியிருப்பு திறப்பு விழா

    • பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் 32 வீடுகள் கொண்ட போலீஸ் குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.
    • சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார்.

    பெருந்துறை:

    பெருந்துறை பழைய பஸ் நிலையம் பகுதியில் 48 சென்ட் பரப்பளவில் ரூ.5 கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட 32 வீடுகள் கொண்ட போலீஸ் குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா நடைபெற்றது.

    சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக பெருந்துறை குடியிருப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர்கள் மசூதா பேகம், நிர்மலா, பெரியசாமி, சப்-,ன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், ஜீவானந்தம், கல்பனா, வேலுச்சாமி, தங்கமுத்து, கருப்புசாமி, நாகராஜ் மற்றும் போலீசார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×