search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை
    X

    எலி மருந்து சாப்பிட்டு இளம்பெண் தற்கொலை

    • மது ஸ்ரீ திடீரென வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார்.
    • இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னிமலை:

    கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் அடுத்த தாரைக்கொங்புதூர் பகுதியை சேர்ந்தவர் வெங்க டாசலம். இவரது மனைவி மகேஸ்வரி.

    இவர்களது மகள் மது ஸ்ரீ (வயது 19). இவர்கள் தற்போது சென்னி மலை அடுத்த ஈங்கூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரு கின்றனர். மதுஸ்ரீ பிறந்ததில் இருந்தே உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார்.

    இந்நிலையில் மது ஸ்ரீ திடீரென வீட்டில் எலி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்தார். இதை கண்ட அக்கம் பக்கத்தினர் உடனடி யாக அவரை மீட்டு பெரு ந்துறை ஐ.ஆர்.டி.டி. அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ெதாடர்ந்து மேல் சிகி ச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவ மனையில் அனு மதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி மது ஸ்ரீ பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து சென்னி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×