search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பஸ் முன்பக்க இருசக்கரங்கள் கழன்றதால் பரபரப்பு
    X

    அரசு பஸ் முன்பக்க இருசக்கரங்கள் கழன்றதால் பரபரப்பு

    • பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.
    • பஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது.

    கொடுமுடி:

    ஈரோடு பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை அரசு டவுன் பஸ் 6 ஏ நம்பர் ஈரோட்டில் இருந்து சோலார், மொடக்குறிச்சி வழியாக பாசூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

    பஸ்சை கதிர்வேல் என்பவர் ஓட்டி வந்தார். மணி என்பவர் கண்டக்டராக இருந்தார்.

    பஸ் ஊஞ்சலூர் அடுத்த சோளாங்காபாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பஸ்சின் முன்பக்க இரு சக்கரங்களும் கழன்று பின் சக்கரத்தில் சிக்கிக்கொண்டது.

    இதனால் பஸ் பயங்கர சத்தத்துடன் குலுங்கியபடி நின்றது. பயணிகள் உயிர் தப்பினர்

    இதில் பஸ்சில் பயணம் செய்த 8 பயணிகள் உயிர் தப்பினர்.

    இதைத்தொடர்ந்து மாற்று பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் ஏற்றி அழைத்து செல்லப்பட்டனர்.

    இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

    Next Story
    ×