search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்சோவில் விவசாயி கைது
    X

    போக்சோவில் விவசாயி கைது

    • உறவினர் ஒருவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
    • சிறுமி கொடுத்த புகாரில் வாழப்பாடி போலீசார், சிவக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த வேப்பிலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவக்குமார் (வயது44). இவருக்கும் இவரது உறவினர் ஒருவருக்கும் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட முன்விரோதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.

    இந்நிலையில், வாழப்பாடி அருகே தனியார் கல்லுாரியில் படித்து வரும் சிறுமியிடம் சிவக்குமார், அத்துமீறி பேசியுள்ளார். இதுகுறித்து சிறுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாழப்பாடி போலீசார், சிவக்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×