என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து விவசாயி தற்கொலை
- பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
- டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்து காரில் அமர்ந்து குடித்துள்ளார். காரில் இருந்து வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் சென்று பார்த்தபோது, உதயகுமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள மாவுரெட்டியை சேர்ந்தவர் உதயகுமார் ( வயது 50) விவசாயி. இவர் மனைவியை விட்டு பிரிந்து, தனது தாய் கருப்பாயி வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு குழந்தைகள் இல்லை.
உதயகுமார் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தனது காரில் பரமத்தி வந்த உதயகுமார், டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி வந்து காரில் அமர்ந்து குடித்துள்ளார். காரில் இருந்து வெகு நேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அருகில் உள்ள கடைக்காரர்கள் சென்று பார்த்தபோது, உதயகுமார் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.
இதுகுறித்து பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்ததன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார், இறந்து கிடந்த உதயகுமாரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதில், உதயகுமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இந்தசம்பவம் குறித்து பரமத்தி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்