என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம்
- தருமபுரி அருகே காட்டு யானை தாக்கியதில் விவசாயி படுகாயம் அடைந்தார். அவரை உடனே அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவ–சாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அருகே வன பகுதியை ஒட்டியுள்ள ஜில் திம்மனூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குள்ளப்பன் (வயது .60) இவர் நேற்று மதியம் அதே பகுதியில் உள்ள தனது விவசாய நிலத்தில் விவசாய பணிசெய்து கொண்டி ருந்தார்.
அப்போது தனது விவசாய நிலத்தில் இருந்து இலை தலை பறிப்பதற்காக தேன்கனிக்கோட்டை வன சரகத்திற்கு உட்பட்ட வன சரகம் ஆகும் இந்த இந்த வனத்திற்குள் குள்ளப்பன் சென்றுள்ளார். அந்த வனப்பகுதியில் 2 காட்டு யானைகள் இருந்துள்ளது இந்த நிலையில் குள்ளப்பனை கண்ட இரண்டு காட்டு யானைகளில் ஒன்று திடீரென ஆக்ரோசமாகி குள்ளப்பனை தும்பிக்கையால் தாக்கியும்,
தொடையை தந்தந்தால் குத்தி கிழித்து விட்டு அங்கி ருந்து சென்றது. இதில் குள்ளப்பன் பலத்த காயமடைந்து மயக்கமடைந்தார், அப்போ து வனப்பகுதியில் மாடு மேய்த்து கொண்டிருந்தவர்கள், இதனை கண்டு காயமடைந்த விவசாயி குள்ளப்பனை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விவ சாயி குள்ளப்பன் யா னையால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்ப டுத்தி உள்ளது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறும்போது:-
தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் ஆடு மாடுகள் மேய்க்கவும் கனிம வளங்களை எடுப்பதற்காகவும் உள்ளே செல்லக் கூடாது என அரசு கட்டுப்பாடுகள் விதித்தும் விதிமுறைகளை மீறி பாதுகாக்கப்பட்ட வனப்ப குதிக்குள் செல்லும்போது இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகிறது. வனத்தை ஒட்டி உள்ள பொதுமக்களும் விவ–சாயிகளும் வனப்பகுதிக்குள் செல்வதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். மேலும் அரசு விதிமுறைகளை மீறி வனப்–பகுதிக்குள் செல்வார்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்