search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது.
    • சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மழை பெய்து வந்தது.

    மழை பெய்ததால் பொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் உள்ள அணைகளுக்கு தண்ணீர் அதிகளவு வந்து கொண்டிருந்தது.

    பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கும் மழை காரணமாக தண்ணீர் அதிகளவு வந்தது. தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரிக்கவே ஆழியார், பரம்பிக்குளம் அணைகள் அடுத்தடுத்து நிரம்பின.

    அணைகள் நிரம்பியதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி அணையில் இருந்து மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் தற்போது மழையின் அளவு குறைந்து விட்டது. இருந்தாலும் அணைகளுக்கு வரும் தண்ணீர் அளவு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

    120 அடி கொண்ட ஆழியார் அணையின் நீர்மட்டம் தற்போது 119.40 அடியாக உள்ளது. அப்பர் ஆழியார் அணையில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் வினாடிக்கு 1000 கன அடி நீர் வருகிறது.

    இதன் காரணமாக அணையில் இருந்து வினாடிக்கு 1000 முதல் 1200 கன அடி வரை உபரிநீர் வெளியேற்றப்பட்டது. சில மணி நேரங்களில் நீர் வெளியேற்றுவதும் நிறுத்தப்பட்டது.

    அதேபோல டாப்சிலிப்பை அடுத்துள்ள பரம்பிக்குளம் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக உள்ளது. 78 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் தற்போது 68 அடியாக உள்ளது.

    வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வரத்து உள்ளது. 900 கன அடி தண்ணீர் திருமூர்த்தி அணைக்கு திறக்கப்படுகறது. தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் மேலாக ஆழியார், பரம்பிக்குளம் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×