என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை சாலையோரம் கொட்டிச் சென்ற விவசாயிகள்
- தருமபுரி மாவட்டத்தில் போதிய விலை கிடைக்காததால் சாமந்தி பூக்களை ரோட்டோரம் கொட்டி விவசாயிகள் கொட்டி சென்றனர்.
- செண்டுமல்லி பூக்கள் கிலோ ரூ. 5 முதல் முதல் ரூ. 10க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது
தருமபுரி மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் அனைத்து வகை பூக்களையும் சாகுபடி செய்து வருகின்றனர். இங்கு விளையும் பூக்களை தமிழகத்தின் பல மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களிலும் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
கடந்த புரட்டாசி மாதம் பூக்களின் விலை குறைந்து படு வீழ்ச்சியில் விற்பனை செய்யப்பட்டது. பின்னர் விஜயதசமி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயர்ந்து கிலோ சாமந்திப்பூ ரூ. 200க்கும் செண்டுமல்லி ரூ .50 க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தற்பொழுது பூக்களின் வரத்து அதிகரிப்பால் சாமந்தி, செண்டுமல்லி பூக்கள் கிலோ ரூ. 5 முதல் முதல் ரூ. 10க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பூக்களை வாங்க வியாபாரிகள் வராததால் விற்பனை ஆகாத பூக்களை விவசாயிகள் ரோடு ஓரங்களில் கொட்டி செல்கின்றனர்.
தருமபுரி பென்னாகரம் ரோட்டில் இருந்து சேலம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் பிரிவு சாலை ஓரத்தில் சாமந்தி மற்றும் செண்டு மல்லி பூக்களை விவசாயிகள் கொட்டி சென்றுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்