search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கடையம் அருகே விவசாயிகள் மேளா
    X

    அணைந்தபெருமாள் நாடானூரில் விவசாயிகள் மேளா நடைபெற்ற காட்சி.

    கடையம் அருகே விவசாயிகள் மேளா

    • தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேளா நடைபெற்றது.
    • அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    கடையம்:

    கடையம் வேளாண்மை -உழவர் நலத்துறை சார்பில் அணைந்த பெருமாள்நாடானூர் ஊராட்சிக்குட்பட்ட செல்லப்பிள்ளையார்குளம் கிராமத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண் இயக்கம் திட்டத்தின் கீழ் விவசாயிகள் மேளா நடைபெற்றது. தென்காசி மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்துராஜா (மத்திய, மாநில திட்டங்கள்) தலைமை தாங்கினார். துணை வேளாண்மை அலுவலர் சுப்ராம் வரவேற்று பேசினார். கடையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஏஞ்சலின் பொன்ராணி இத்திட்டம் பற்றி விளக்க உரையாற்றினார்.

    அணைந்த பெருமாள்நாடானூர் ஊராட்சி மன்ற தலைவர் அழகுதுரை, மாவட்ட கவுன்சிலர் சுதா, ஒன்றிய கவுன்சிலர் பாலகசெல்வி ஆகியோர் வாழ்த்தி பேசினர். வேளாண்மை துணை இயக்குனர் நல்லமுத்துராஜா, தென்காசி மண்பரிசோதனை கூடம் வேளாண்மை அலுவலர் மகேஷ் இத்திட்டம் பற்றி தொழில்நுட்ப உரையாற்றினார். ஓய்வுபெற்ற துணை வேளாண்மை அலுவலர் ராஜகோபால் சிறப்புரையாற்றினார். வேளாண்மை உதவி அலுவலர்கள் கமல்ராஜன், பேச்சியப்பன், அட்மா தொழில்நுட்ப மேலாளர் பொன்னாசீர் செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர் நாகராஜன் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.விழாவிற்கு முன்னோடி விவசாயிகள் தங்ககிருஷ்ணன், சர்க்கரை குமரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். வேளாண்மை உதவி அதிகாரி தீபா நன்றி கூறினார்.

    Next Story
    ×