search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகள் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்
    X

    கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ்

    விவசாயிகள் தண்ணீரை முறையாக பயன்படுத்த வேண்டும்- கலெக்டர் அறிவுறுத்தல்

    • குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
    • மீன்பிடி தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடவோ வேண்டாம்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாசனத்திற்காக நாளை மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. நிலைமைக்கேற்ப பாசனத்திற்கு முறை வைத்து தண்ணீர் விடப்படும். விவசாயப் பெருங்குடி மக்கள் அனைவரும் தண்ணீரை முறையாக பயன்படுத்தி நீர்பங்கீட்டில் நீர்வளத்துறை அலுவலர்களுடன் ஒத்துழைத்து பயன்பெற வேண்டும்.

    தண்ணீர் திறந்துவிடுதல் தொடர்பாக அவ்வப்போது விளம்பரம் செய்யப்படும். காவேரி வடிநிலப் பகுதிகளில் தண்ணீர் திறந்துவிடும் போது ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ, நீச்சல் செய்யவோ, மீன்பிடித் தொழிலில் ஈடுபடுதலோ அல்லது இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்.

    பொதுமக்கள் யாரும் ஆபத்து ஏற்பட கூடிய இடங்களில் நின்று செல்பி எடுக்க வேண்டாம். குழந்தைகள் எவரும் ஆறுகள், கால்வாய்கள் மற்றும் இதர நீர்நிலைகளில் இறங்கி விடாமல் தடுத்திடுமாறு பெற்றோர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தண்ணீர் திறந்து விடும் போது விலங்குகள், நீர்நிலைகளில் கடந்து செல்லும்போது பாதுகாத்திட விவசா யிகளுக்கு அறிவுறுத்தப்படு கிறது. 108 ஆம்புலன்ஸ் தயார் நிலையில் உள்ளது.

    இவ்வாறு அதில கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×