search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    கரும், செம்புள்ளி குத்திய மண்பானையை தலையில் கவிழ்த்து கொண்டு மனு அளித்த விவசாயிகள்
    X

    கரும், செம்புள்ளி குத்திய மண்பானையை தலையில் கவிழ்த்து கொண்டு மனு அளித்த விவசாயிகள்

    • பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
    • கர்நாடகா அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் தீபக்ஜேக்கப் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

    அப்போது விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் மாநில துணை தலைவர் கக்கரை சுகுமாறன் தலைமையில் விவசாயிகள் தலையில் மண்பானையை கவிழ்த்து கொண்டு அதில் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தியப்படி கலெக்டரிடம் நூதன முறையில் மனு கொடுத்தனர்.

    விவசாய கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். மாணவ-மாணவிகளின் கல்விக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். பிரதம மந்திரி பயிர் காப்பீடு செய்தும் 2022-23-ம் ஆண்டுக்கான இன்சூரன்ஸ் வழங்கவில்லை. 2023-24 பயிர் காப்பீடு செய்தும் இன்சூரன்ஸ் வழங்கவில்லை. எனவே ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரமும் நிவாரணம் வழங்க வேண்டும்.

    கர்நாடகா அரசு அத்துமீறி காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பியவாறே சென்றனர். இதனால் குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×