search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    தங்கமுலாம் பூசிய செம்பை கொடுத்து   மோசடி செய்த தந்தை- மகன்
    X

    தங்கமுலாம் பூசிய செம்பை கொடுத்து மோசடி செய்த தந்தை- மகன்

    • போலி நகைகள் கொடுத்து இதற்கு முன்னரும் மோசடி செய்துள்ளனர்.
    • காட்டூர் போலீசில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கோவை,

    கோவைப்புதூரை சேர்ந்த கார் டிரைவர்கள் பாலதண்டபாணி (65), அவரது மகன் விவேக்(35). இவர்கள் கடந்த 5-ந் தேதி காந்திபுரம் ராம் நகரில் உள்ள நிதி நிறுவனத்துக்கு சென்று 24 கிராம் நகைகளை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 800 பணம் பெற்றனர். அப்போது நகை மதிப்பீட்டாளர் நகையை ஆய்வு செய்த போது அந்த நகைகள் போலி எனவும், தங்க முலாம் பூசியது என்பது தெரியவந்தது. இது குறித்து நிதி நிறுவனத்தினர் காட்டூர் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், கோவை ரத்தினபுரி கண்ணப்ப நகரை சேர்ந்த விசு (22) என்ற பைனான்சியரிடம் தந்தை, மகன் இருவரும் தங்க முலாம் பூசிய செம்பை கொடுத்து பணம் மோசடி செய்திருப்பதும், அந்த வழக்கில் ஆர்.எஸ்.புரம் போலீசார் அவர்களை கைது ஜெயிலில் அடைத்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து பாலதண்டபாணி மற்றும் அவரது மகன் விவேக் மீது காட்டூர் போலீசில் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல், அவர்கள் வேறு யாரிடமாவது மோசடியில் ஈடுபட்டுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×